2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா: 800 பொலிஸார் பாதுகாப்பில்

Kogilavani   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அத்தினத்தில் 800 பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி எட்மன் மகேந்திரா புதன்கிழமை (19) தெரிவித்தார்.

மேற்படி ஆலயத்தில் மார்ச் மாதம் 10 ஆம் திகதி விளக்கு வைக்கப்பட்டு 17 ஆம் திகதி பொங்கல் நடைபெறவுள்ளது.

திருவிழாவினையொட்டி மேற்படி ஆலயத்திற்கு பல பாகங்களிலிருந்து அதிகளவான பக்தர்கள் வருவார்கள் என்ற காரணத்தினால், பக்தர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

பக்தர்கள் அதிகமுள்ள இடங்களில் திருட்டுக்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் இடம்பெற வாய்ப்புள்ளதால் பக்தர்கள் அது பற்றி அவதானமாக இருப்பதுடன், நகைகள் அணிந்து செல்வதனைத் தவிர்க்கும்படி தங்கள் பாதுகாப்புத் தொடர்பில் பொலிஸாருடன் இணைந்து செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .