2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இந்திய வீட்டுத் திட்டம் 16ஆம் திகதி யாழில் ஆரம்பம்: யாழ். அரச அதிபர்

Super User   / 2011 மே 04 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்ட்டட மக்களுக்காக இந்தியஅரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டு திட்ட பணிகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இந்த வீட்டு திட்டத்திற்hகன வேலைகளை செய்வதற்காக இந்திய பொறியியலாளர் குழு யாழ்பாணத்திற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வருகை தரவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் கீழ் 7,400 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர் வீட்டுத்திட்ட பணிகளின் முன்னோடியாக புதிதாக 150 வீடுகளும், புனரமைப்பு என்ற வகையில் 2,000 வீடுகளும், புதிதாக கட்டிக்கொடுக்கும் வகையில் 5,250 வீகளும் கட்டிக்கொடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X