2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழில் கடந்த வாரம் 183பேர் கைது

Menaka Mookandi   / 2014 மே 30 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் 183பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எம்.திலகரட்ண இன்று வெள்ளிக்கிழமை (30) தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரும் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரும் குடிபோதையில் வாகனம் செலுத்திய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், அடித்துக் காயம் ஏற்படுத்திய 40பேரும் அனுமதிப்பத்திரமின்றி மது விற்பனை செய்த 7பேரும் சந்தேகத்தின் பெயரில் 8பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 11பேரும் விபத்துக்குக் காரணமாகவிருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சொத்துக்களுக்கு நட்டம் விளைவித்த ஒருவரும் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவரும் குடிபோதையில் குழப்பம் விளைவித்த மூவரும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தி 4 பேருமாக மொத்தம் 87பேர் கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 27பேரும் சந்தேகத்தின் பேரில் 14 பேரும் குடிபோதையில் குழப்பம் விளைவித்த மூவரும் ஏனைய குற்றச்செயல்களிற்காக 45 பேருமாக மொத்தம் 96பேர் கைது செய்யப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X