2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பருத்தித்துறை மீனவர்கள் இருவர் 43 நாட்களுக்கு பின் இந்திய படையினரால் விடுதலை

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தாக, இந்திய கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த யாழ், பருத்தித்துறை மீனவர்கள் இருவர் 43 நாட்களுக்கு பின்னர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விரு மீனவர்களும் இந்திய கடலோரக் காவல் படையினரால் காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத் தலைவர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

பருத்தித்துறை இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்யக்கோரி பருத்தித்துறை சுப்பரமணியம் கடற்றொழிலாளர் சங்கத்தினர் யாழ். பிராந்திய கடற்றொழில் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவாஜி பிரபு மற்றும் ராமமூர்த்தி ஆகிய இரு மீனவர்களே இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ண்;ற மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய கடலோரக் காவல் படையினருடன் தொடர்பு கொண்டு அவர்களின் விடுதலை பற்றி பேசியதாகவும் அதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத் தலைவர் எஸ்.கணேசமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .