2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஒரு இறாத்தல் பாணினை 450 கிராம் நிறையுடையதாக தயாரிக்குமாறு வேண்டுகோள்

Kogilavani   / 2014 மார்ச் 05 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஒரு இறாத்தல் பாணின் நிறை 450 கிராமிற்கு குறையாமல் தயாரிக்குமாறு வெதுப்பக உரிமையாளர்களிடம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ். மாவட்ட அதிகாரி தனசேகரம் வசந்தசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை  (05) தெரிவித்துள்ளதாவது, 

மல்லாகம் மற்றும் பருத்தித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட பாணின் நிறைகள் குறைவடைந்து காணப்பட்டமை பாவனையாளர் அதிகார சபையினால் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இறாத்தல் பாண் 380 கிராமிற்கும் 410 கிராமிற்கும் இடைப்பட்ட நிறையுடையதாக காணப்பட்டன.

இதனால், யாழ்.மாவட்ட வெதுப்பக உரிமையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாணின் நிறையினை 450 கிராமிற்கு குறையாமல் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

இது தொடர்பாக விரைவில் யாழ்.மாவட்ட வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்துடன் கலந்துரையாடி பாணின் நிறையினை சரியான முறையில் பேணுதல் தொடர்பாக அறிவுறுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .