2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கூட்டுறவு பெரியார் வீரசிங்கத்தின் 49ஆவது நினைவு தினம்

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


கூட்டுறவு பெரியார் அமரர் வீரசிங்கத்தின் 49வது நினைவு தினமும் 91ஆவது சர்வதேச கூட்டுறவு  தின விழா இன்று வியாழக்கிமை நடைபெற்றது.

யாழ். மாவட்ட கூட்டுறவு சபை தலைவர் தி.சுந்தரலிங்கம் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் தவிசாளர்; சி.வி.கே சிவஞானம் மற்றும் இலங்கை தேசிய கூட்டுறவுச் சபை தலைவர் லலித் ஏ. பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு  கூட்டுறவு பெரியாரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, வீரசிங்கத்தின் நினைவுப் பேருரை இடம்பெற்றது. இதன்போது, பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாடசாலை மட்ட கவிதை கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .