2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சமூக பாதுகாப்பு சபையில் 700 பேர் இணைவு

Kogilavani   / 2014 மே 21 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சுயதொழில் ஓய்வூதிய திட்டத்தில் கிளிநொச்சி மாவட்;டத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 700 பேர் வரையில் சபையில் இணைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பாக்கியராசா பிரதீபன் புதன்கிழமை (21) தெரிவித்தார்.

வறுமையினை தணிக்கும் நோக்கத்துடன், இலங்கை சமுர்த்தி அதிகார சபை மற்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபை ஆகியவற்றினை அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.

இருந்தும், இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் நடவடிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் 2013 ஆம் ஆண்டு ஆரம்பமாகியதுடன், அவ்வாண்டு 456 பேர் சபையில் இணைந்தனர்.

இந்நிலையில் தற்போது 2014 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் இதுவரையிலும் 700 பேர் வரையில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பூநகரி பிரதேச செயலர் சி.சத்தியசீலன், சமூக சேவைகள் அலுவலர் செ.சுரேந்திரா, பிரதேச செயலக பிரிவின் கிராம அலுவலர்கள் ஆகியோரின் சிறப்பான பங்களிப்புடன் அதிகமானவர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X