2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

திருட்டு குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குள் இடம்பெற்ற பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், முல்லைத்தீவைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவனை ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்ததாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகநபரிடமிருந்து கணினி, றேடியோ செட், மோட்டார் சைக்கிள் உபகரணங்கள், இலத்திரனியல் உபகரணங்கள், மின்மோட்டார் ஆகிய பொருட்களை மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற குழுவினர், பல்லஞ்சுட்டி பகுதியில் மறைந்திருந்த மேற்படி சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .