2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 24பேர் விடுவிப்பு

Menaka Mookandi   / 2014 ஜூன் 25 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்;டில் கடந்த வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கமைய ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமாரினால் இன்று புதன்கிழமை (25) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் வந்த 6 படகுகளையும் வலைகளையும் தொடர்ந்து தடுத்து வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டணத்திலிருந்து 6 படகுகளில் வந்த 24 மீனவர்களையும் நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து வியாழக்கிழமை (19) அதிகாலை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறையினர், குறித்த மீனவர்களை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது குறித்த மீனவர்கள் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே குறித்த மீனவர்கள் இன்று (25) விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களைப் பொறுப்பேற்றுக்கொண்ட யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தினர் இலங்கை கடற்படையினர் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .