2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மருந்தக நிலையத்தில் 2,57,300 ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் திருட்டு

Kogilavani   / 2014 மார்ச் 06 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். புத்தூர் ஆவரங்கால் பகுதியிலுள்ள மருந்தக நிலையமொன்றில் 2,57,300 ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் என்பன புதன்கிழமை (05) இரவு திருடப்பட்டுள்ளதாக மருந்தக நிலையத்தின் உரிமையாளரான வேலும்மயிலும் குருபரன் என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி கே.எம்.சி.பிரதீப்செனவிரட்ண வியாழக்கிழமை (06) தெரிவித்தார்.

குறித்த நிலையத்தின் உரிமையாளர் வியாழக்கிழமை அதிகாலை நிலையத்திற்கு சென்றபோது, நிலைய முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த  பால்மா வகைகள், குளிர்பானம்,  உள்ளிட்ட 2,51,100 ரூபா பெறுமதியான பொருட்களும் 6200 ரூபா பணமும் திருட்டுப்போயுள்ளதாக உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவித்தார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .