2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 26 பேர் கைது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 06 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 26 பேர்; கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த போது கரையோர பாதுகாப்பு படை பிரிவினரும், இலங்கை கடற்படை பிரிவினரும் இணைந்து இவர்களை நேற்றிரவு 8 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 26 மீனவர்களும் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் இலங்கை கடற்படையினரால் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ்நாடு காரைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் 5 ரோலர் படகுகளில் அத்துமீறி நுழைந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் 26 பேரும் யாழ். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X