2025 ஜூன் 18, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் 26 பேருக்கும் 6 நாள் விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 06 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு 6 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். ஊர்காவற்துறை நிதிமன்ற பதில் நீதிவான் ஆர். சபேசன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக இந்திய ரோலர் படகுகள் 5 மற்றும் படகில் வந்த 26 மீனவர்களும் நேற்று இரவு 8.00 மணியளவில் இலங்கை கரையோரப்பாதுகாப்பு படையினர் மற்றும், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஒப்படைக்கபட்ட 26 இந்திய மீனவர்களையும் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினர் யாழ். ஊர்காவற்துறை நீதிவான் நீதமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய வேளை 26 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ரமேஸ்கண்ணா கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .