2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 29 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். நெடுந்தீவு தெற்கு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார்  உத்தரவிட்டார்.

இவர்களை நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (24) மீண்டும் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த  உத்தரவை பிறப்பித்தார்.

இந்தியா,  புதுக்கோட்டை மாவட்டத்தின் ஜகதாப்பட்டிணப் பகுதியிலிருந்து 07 படகுகளில் வந்த 29 இந்திய மீனவர்களையும் 12ஆம் திகதி  காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்து யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், இவர்கள் 29 பேரையும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் கடந்த 13ஆம் திகதி ஆஜர்படுத்தியபோது,  இவர்களை திங்கட்கிழமைவரை (24)  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .