2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ்.நல்லூர் பகுதியில் 4 கடைகளில் திருட்டு

Kogilavani   / 2013 மார்ச் 05 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள 4 கடைகளில் ஒரே நேரத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கடை உரிமையாளர்கள் இன்று அதிகாலை கடையினை திறக்க முற்பட்டவேளை கடைகள் உடைத்து திருடப்பட்டுள்ளமை தொடர்பில் அறிந்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

நான்கு கடைகளிலும் பணம் உட்பட சுமார் 2 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.  அத்திருட்டு சம்பவம் தொடர்பாக 4 கடை உரிமையாளர்களும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .