2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 06 பேர் கைது

Gavitha   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 06 பேரை, சனிக்கிழமை (13) இரவு கைது செய்துள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (14) தெரிவித்தனர்.

ஈவினை பகுதியை சேர்ந்த இருவர், உடுவில் பகுதியை சேர்ந்த மூவர் மற்றும் தாவடி பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைகலப்பில் ஈடுபட்ட 4 பேர், தபாரிப்புப்பணம் கட்டாத 2 பேர் என்ற குற்றங்களின் அடிப்படையிலேயே இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்களுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணைகள் இரண்டு தடவைகள் விடுக்கப்பட்ட போதும், இவர்கள் மன்றிற்கு சமூகமளிக்கவில்லை.

இதனையடுத்து, நீதவான் சந்தேகநபர்களுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (12) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .