2025 ஜூன் 25, புதன்கிழமை

ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் 120 பேருக்கு இடமாற்றம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 01 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் 120 பேருக்கு நாளை வியாழக்கிழமை  நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக  வலிகாமம் கல்வி வலய உயர் அலுவலகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த இடமாற்றங்கள் கோட்ட மற்றும் வலய மட்டத்திற்கு உள்ளேயே மேற்கொள்ளப்படவுள்ளன.  இதற்கான கடிதங்கள் ஒவ்வொரு ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

கடந்த 07 வருடங்களாக ஒரே பாடசாலையில் கடமையாற்றிவந்த 120 ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .