2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் 161 பேர் கைது

Kogilavani   / 2014 ஜூன் 13 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்தவாரம் மாத்திரம் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலேயே அதிகளவான குற்றங்கள் இடம்பெற்று வந்தன. எனினும் 8 பாரிய குற்றங்களில் ஈடுபட்ட அறுவர் கைது செய்யப்பட்ட பின்னர் குற்றங்கள் குறைவடைந்துள்ளது.

இதனடிப்படையில், கலங்களை ஏற்படுத்தி காயம் ஏற்படுத்திய 10 பேரும், கொலை குற்றத்தில் 4 பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 5 பேரும், அனுமதிப்பத்திரமின்றி மதுவிற்பனையில் ஈடுபட்ட 27 பேரும், சந்தேகத்தின் பேரில் 58 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 22 பேரும், வீதி விபத்துக்கு காரணமான 03 பேரும், திருட்டில் ஈடுபட்ட 10 பேரும், குடிபோதையில் கலகம் விளைவித்த 03 பேரும், பொது இடத்தில் மது அருந்திய 10 பேரும், கத்திவெட்டுத் தாக்குதல் நடத்திய 5 பேரும், சட்டவிரோத மின் இணைப்புப் பெற்ற ஒருவரும், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த ஒருவரும், கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரும், சாரதி அனுமதிக்கப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய ஒருவருமான மொத்தம் 161 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X