2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வீடொன்றில் 180,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு

Kogilavani   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.அளவெட்டி தம்பளை பகுதியிலுள்ள வீடொன்றில் 1,80,000 ரூபா பெறுமதியான நகை மற்றும் தொலைபேசி என்பன திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளரினால் செவ்வாய்க்கிழமை (25) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (25) நண்பகல் ஆலயமொன்றிற்கு சென்றிருந்த வேளை, வீட்டின் பின்பகுதிக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 150,000 பெறுமதியான தாலிக்கொடி, 30,000 பெறுமதியான கைத்தொலைபேசி என்பவற்றை திருடியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .