2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். வாகன விபத்தில் 3 பேர் பலி; 12 பேர் காயம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்,சுமித்தி)

யாழ்ப்பாணம், இருபாலைப் பகுதியில் இரு தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்ததுடன், 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 இப்பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த இரு தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான இரு பஸ்களின் சாரதிகளான வேலாயுதம் செந்தில்குமார் மற்றும் அன்னலிங்கம் அமுதராஜ் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் மினி பஸ்ஸொன்றும் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மற்றொரு தனியார் பஸ்ஸொன்றும் ஒன்றுடனொன்று நேருக்குநேர் மோதியே இவ்விபத்து சம்பவித்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை வீதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இம்மினிபஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுமுனையில் பயணம் செய்ததால் விபத்து சம்பவித்ததாக தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும்   குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .