2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழில் 201 பேர் கைது

Kogilavani   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில்.கடந்த வாரத்தில் சிறு குற்றங்கள் புரிந்த 201 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பரிசோதகர் பி.எம்.ஆர்.கே.பி. ரஞ்சித் பாலசூரிய  வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச் செயல்களின் பிரகாரமே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில்   நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 26 பேரும்,  கைகலப்புகளில் ஈடுபட்ட 41  பேரும், சந்தேகத்திற்கிடமான    முறையில் நடமாடிய 14 பேரும், மதுபோதையில்  வாகனம்  செலுத்திய 25  பேரும்,  திருடிய குற்றச்சாட்டில் ஒருவரும், வீதி விபத்துக்களை ஏற்படுத்திய 8 பேரும், மதுபோதையில் கலகம் விளைவித்தவர்கள் 7 பேரும், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 4 பேரும், சொத்துகளுக்கு சேதம் விளைவித்த ஒருவரும், பாதுகாப்பு மீறிய குற்றச்சாட்டில் ஒருவரும், சுற்றுச் சூழலை மாசுபடுத்திய  குற்றச்சாட்டில் ஒருவரும்,  ஏனைய குற்றங்களுக்காக 72 பேருமாக மொத்தம் 201 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பரிசோதகர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .