2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சுகாதார கலை நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 25 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வி.தபேந்திரன்


தட்டுவன்கொட்டி கிராமமட்ட அமைப்புக்கள் இணைந்து  ஏற்பாடு செய்த 'சுகாதாரத்தை பேணி சுகமாய் வாழ்க' என்ற தலைப்பிலான சுகாதார கருத்துக்கள் உள்ளடங்கிய கலை நிகழ்வு சனிக்கிழமை (24) தட்டுவன்கொட்டி பொது மண்டபத்தில் இடம்பெற்றது.

அமைப்புக்களின் தலைவர் நா.தியாகராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள் வரைந்த சுகாதாரம் சம்பந்தமான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், கட்டுரை ஆக்கங்களும் நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சுகாதாரம் தொடர்பான கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய சிவில் தொடர்பு அதிகாரி எம்.அலன்டின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X