2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழில் விவசாயத்திற்கு உதவாத நிலையில் 2500 ஹெக்டேயர் நிலப்பரப்பு

George   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா

யாழ். மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கு உதவாத நிலையில்; 2500 ஹெக்டேயர் நிலப்பரப்பு காணப்படுவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கிருஸ்ணன் ஸ்ரீபாலசுந்தரம், ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தார்.

இந்த நிலங்களில் நீர் தேங்கி நிற்காது என்பதால் நிலத்தை பண்படுத்த முடியாது எனவும் அதன் காரணமாக எக்காலப்பகுதியிலும் இந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, இந்த நிலங்களை மேட்டு நிலமாக்கி வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாம். அல்லது குடியிருப்பு காணிகளாக மாற்றலாம் என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .