Suganthini Ratnam / 2011 மார்ச் 22 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நகரப் பகுதிகளில் சைக்கிள்களில் சமாந்தரமாகப் பயணித்த 26 பேருக்கு தலா 500 ரூபாய் வீதம் அபராதத் தொகை விதித்து யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராசா இன்று தீர்ப்பளித்துள்ளார்;.
யாழ். நகரப் பகுதிகளில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள்களில் சமாந்தரமாகப் பயணித்ததாகக் கூறி 26 பேர் இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்.; பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு; யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, இவர்களுக்கான அபராதத் தொகை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதேவேளை, கடந்த 15ஆம் திகதி யாழ். நகரப்பகுதியின் பிரதான ஏ - 9 வீதியில் சைக்கிள்களில் சமாந்தரமாகப் பயணித்த 80 பேர் யாழ். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 30 பேர்; யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தலா 500 ரூபாய் அபராதத் தொகை விதித்து நீதவான் தீர்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025