2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யாழில் 262 பேர் சாட்சியமளிக்கவுள்ளனர்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

யாழ்.மாவட்டத்தில் காணாமற்போனவர்களின் 262 பேரின் உறவினர்கள் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு குணதாசாவினால் யாழ்.மாவட்டத்தில் இந்த விசாரணைகள் எதிர்வரும் 14,15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் காணாமற்போனோரின் விபரங்கள் கிராமஅலுவர் பிரிவுகளாகச் சேகரிக்கப்பட்டு, பிரதேச செயலகங்களினூடாக காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டிருந்தன. அதனடிப்படையில் கிராமஅலுவலர் பிரிவுகள் ரீதியாக காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
                              
அந்த வகையில், காணாமற்போனோரின் உறவினர்கள் 14 ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலகத்திலும், 15 ஆம் திகதி சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும், 16, மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ்.மாவட்டச் செயலகத்திலும்; சாட்சியமளிக்கவுள்ளனர்.

யாழில் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கையின் ஆரம்பக் கலந்துரையாடல் புதன்கிழமை (05) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலர்,

கோப்பாய் பிரதேச செயலகத்தின் 13 கிராமஅலுவலர் பிரிவினைச் சேர்ந்தவர்களும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் 10 கிராமஅலுவலங்களைச் சேர்ந்தவர்களும், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்களின் 8 கிராமஅலுவலர் பிரிவினைச் சேர்ந்தவர்களுமாக மொத்தம் 262 பேர் சாட்சியமளிக்கவுள்ளனர்.
 
ஆணைக்குழுவிற்கு உதவியாக யாழ்.மாவட்டச் செயலகத்தில் கடமை புரியும் 15 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றவுள்ளனர்.

இந் சாட்சியமளிக்கும் சந்தர்ப்பத்தில் யாழ்.மாவட்டத்தில் காணாமற்போன வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சாட்சியமளிக்க முடியும் என மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .