2025 ஜூன் 25, புதன்கிழமை

தங்கம்மா அப்பாகுட்டியின் ஜனனதினம்: 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அறக்கொடை

Kogilavani   / 2014 ஜனவரி 07 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (07) காலை நடைபெற்ற சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 89 ஆவது பிறந்ததின அறக்கொடை விழாவில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி அறக்கொடையாக வழங்கப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த சுத்திகரிப்புப் பிரிவிற்கு ஒரு இலட்சம் ரூபாவும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதிக்கு 50 ஆயிரம் ரூபாவும் சிவத்தமிழ்ச் செல்வி கல்வி நிதியத்தின் மூலம் மாணவர் ஒருவருக்கு தலா 2000 ரூபா வீதம் 100 மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாவும் அறக்கொடைகளாக வழங்கப்பட்டன.

தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாநிதி குமாரசுவாமி சோமசுந்தரம், யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் செ.கிருஷ்ணராசா, வைத்தியநிபுணர் த.பேரானந்தராஜா, யாழ்.வலயக் கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, வைத்தியகலாநிதி கந்தையா மாணிக்கம், தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய நிர்வாக சபை உறுப்பினர் நாகலிங்கம் தவமணிநாயகம், மூத்த இசைக்கலைஞர் கலாபூஷணம் சுப்பையா கணபதிப்பிள்ளை, மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான திருமதி அன்னலட்சுமி இராஐதுரை, மட்டுவில் இளைப்பாறிய அதிபரும் சமயம் தமிழ் இலக்கிய எழுத்தாளருமான நாகமுத்து நல்லதம்பி ஆகியோருக்கு சிவத்தமிழ் விருதுகள் வழங்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .