2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தந்தை செல்வாவின் 34ஆவது நினைவுதின வைபவம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தந்தை செல்வாவினுடைய 34ஆவது நினைவுதின வைபவம்    யாழ். நகரிலுள்ள அவரது நினைவுச்சதுக்கத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

இதில் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன், சர்வமதத் தலைவர்கள், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், தமிழ் அரசியல்வாதிகள், பேரறிஞர்கள், சமயத்தலைவர்கள், தந்தை செல்வாவின் அறங்காவல்க் குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டு தந்தை செல்வாவின் சிலைக்கு மலர்மாலை அணிவித்தும் அவரது சமாதிக்கு மலர்களினாலும் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து,  பேராசிரியர் சிவச்சந்திரன் நினைவுரையாற்றினார். 

தந்தை செல்வாவினுடைய சிலையை வெண்கலத்தில் செய்வதற்கும் தந்தை செல்வாவினுடைய வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் குறுந்திரைப்படம் தயாரிப்பது தொடர்பிலும் தந்தை செல்வாவின் அறங்காவல்க்குழுத் தலைவர் பேராயர் ஜெபநேசன் அடிகளார் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X