2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 50 பேர் யாழில் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 29 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யோ.வித்தியா, பொ.சோபிகா

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  இந்திய மீனவர்கள் 50 பேரை  யாழ். நெடுந்தீவுக்கு  அண்மித்த  கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை கைதுசெய்ததாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

மேற்படி மீனவர்களை கைதுசெய்த காங்கேசன்துறை கடற்படையினர், தங்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மேற்படி மீனவர்களின்  02 நாட்டுபுறப் படகுகள் உட்பட  07 படகுகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இவர்களை  ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்றையதினம் (29)  ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .