2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் தந்தை, தாயை இழந்த நிலையில் 5,732 சிறுவர்கள் உள்ளனர்: ரூபினி வரதலிங்கம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 16 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் தந்தை அல்லது தாயை இழந்த 5,732 சிறுவர்கள் இருப்பதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டில் தந்தையை இழந்த சிறுவர்கள் 4,679 பேரும் தாயை இழந்த சிறுவர்கள் 1,053 பேரும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தந்தையை இழந்த நிலையில் நெடுந்தீவில் 101 சிறுவர்களும் வேலணையில் 226 சிறுவர்களும் ஊர்காவற்றுறையில் 179 சிறுவர்களும்  காரைநகரில் 123 சிறுவர்களும் யாழ்ப்பாணத்தில் 381 சிறுவர்களும் நல்லூரில் 301 சிறுவர்களும்  சண்டிலிப்பாயில் 530 சிறுவர்களும் சங்கானையில் 346 சிறுவர்களும் உடுவிலில் 503 சிறுவர்களும்  தெல்லிப்பழையில் 364 சிறுவர்களும்  கோப்பாயில் 186 சிறுவர்களும்  சாவகச்சேரியில்  551 சிறுவர்களும்  கரவெட்டியில்  354 சிறுவர்களும் பருத்தித்துறையில்  461 சிறுவர்களும் மருதங்கேணியில்  73 சிறுவர்களும் உள்ளனர்.

தாயை இழந்த நிலையில் நெடுந்தீவில் 27 சிறுவர்களும்  வேலணையில் 56 சிறுவர்களும்  ஊர்காவற்றுறையில் 20 சிறுவர்களும்  யாழ்ப்பாணத்தில் 56 சிறுவர்களும்  காரைநகரில் 38 சிறுவர்களும்  நல்லூரில் 50 சிறுவர்களும்  சண்டிலிப்பாயில் 145 சிறுவர்களும்  சங்கானையில் 73 சிறுவர்களும்  உடுவிலில் 13 சிறுவர்களும் தெல்லிப்பழையில்  67 சிறுவர்களும்  கோப்பாயில் 121 சிறுவர்களும்  கரவெட்டியில் 120 சிறுவர்களும் சாவகச்சேரியில் 109 சிறுவர்களும்  கரவெட்டியில்  120 சிறுவர்களும்  பருத்தித்துறையில் 113 சிறுவர்களும் மருதங்கேணியில் 45 சிறுவர்களும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .