2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

யாழில் கடந்த வாரம் 6 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு: டி.ஐ.ஜி

Kanagaraj   / 2013 மார்ச் 22 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் 6 கொள்ளைச் சம்பவங்களில் 4 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) இந்து கருணாரட்ண இன்று தெரிவித்தார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் கடந்த வாரத்தில் மற்றும் 6 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இக்கொள்ளைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம் முறைப்பாட்டின் பிரகாரம் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாகவும், சில கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .