2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்திய வியாபாரிகள் 8 பேருக்கும் விளக்கமறியல்

Kanagaraj   / 2014 மார்ச் 14 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, யாழ்ப்பாணத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய வியாபாரிகள் 8 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த 8 வியாபாரிகளின் கைது குறித்து யாழ். மாவட்ட சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் பணிப்புரை விடுத்தார்.

மேற்படி 8 இந்திய வியாபாரிகளும் யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வேளை விசேட அதிரடி படையினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்ந்து மேற்படி இந்திய வியாபாரிகள் 8 பேரையும் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளையில் நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்திருந்தார்.

மேற்படி வியாபாரிகளிடமிருந்து 1800 சேலைகள், 2550 சுடிதார்கள், 38 சிறுவர் ஆடைகள், 80 சுடிதார் துணிவகைகள், 5 காஃப் சாறிகள், 25 சல்வார்கமிஸ், 10 பிளவுஸ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .