2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் நான்கு நாட்களுக்கு 9 மணித்தியாலயம் மின் தடை

Kanagaraj   / 2013 ஜனவரி 12 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.சுமித்தி
 

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் 13.01.2013 ஞாயிற்றுக்;கிழமை, 15.01.2013 செவ்வாய்க்;கிழமை, 16.01.2013 புதன்;கிழமை மற்றும் 17.01.2013 வியாழக்கிழமை ஆகிய தினங்களில் 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் நயினாதீவு பிரதான வீதிப் பிரதேசத்திலும் மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
 
13.01.2013 ஞாயிற்றுக்;கிழமை, 15.01.2013 செவ்வாய்க்;கிழமை ஆகிய தினங்களில் 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் கரணவாய் அண்ணாசிலையடிப் பிரதேசம், மாலு சந்தி முதல் துலாக்கட்டு மடத்தடி வரையான பிரதேசம், சாமியன்அரசடி முதல் சம்மந்தர் கடை வரையான பிரதேசம் ஆகிய இடங்களிலும்,

 16.01.2013 புதன்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் குஞ்சர்கடையின் ஒரு பகுதி, நவிண்டில், பொலிகண்டி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, உடுப்பிட்டி, வட்டு இந்துக் கல்லூரிப் பிரதேசம், மாவடி, துணைவி, அராலிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும், 15.01.2013 செவ்வாய்க்;கிழமை, 17.01.2013 விhயழக்;கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் உரும்பிராய், ஊரெழுப் பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும், மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை பொறிலியலாளர் அறிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .