Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடமாகாண சபை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரையில் 258 பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளோம். ஐ.நா தீர்மானங்கள் உள்ளிட்ட சில பிரேரணைகள் நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தெரிந்தும் நிறைவேற்றியுள்ளோம் என வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் திங்கட்கிழமை (21) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,
வட மாகாண சபையின் அதிகாரங்களுக்குட்பட்ட பிரேரணைகள், எண்ணங்கள், அபிலாசைகள், நோக்கங்களை வெளிப்படுத்தும் பிரேரணைகள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கும் பிரேரணைகள் என 3 வகையான பிரேரணைகளை சபையில் நிறைவேற்றியுள்ளோம்.
மேலும்,ஐ.நா சபைக்காக நிறைவேற்றப்பட்ட இனஅழிப்பு, சர்வதேச விசாரணை வேண்டும் என தீர்மானங்கள், மாகாண சபைகளின் உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக நிறைவேற்றினோம். அதற்கு பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்காமல் அந்தப் பிரேரணைகளை நிறைவேற்றினோம் என்றார்.
21 minute ago
27 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
51 minute ago