2025 ஜூன் 30, திங்கட்கிழமை

1கோடி ரூபா மோசடி: விசாரணை கொழும்புக்கு மாற்றம்

Kogilavani   / 2014 மே 30 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி 7 குடும்பங்களை ஏமாற்றி 1 கோடியே 58 இலட்சம் ரூபாவை மோசடி செய்த முறைப்பாடுகளுக்கான விசாரணையை, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிற்கு மாற்றியுள்ளதாக யாழ்.பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எம்.திலகரட்ண வெள்ளிக்கிழமை (30) தெரிவித்தார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

இம் மோசடிச் சம்பவத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தனித்தனியான முறைப்பாடுகளைப் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்த மோசடிச் சம்பவத்திற்கு இடைத் தரகர்களாகச் செயற்பட்ட இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (20) யாழ்.கஸ்தூரியார் வீதியிலுள்ள வீடொன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், குறித்த மோசடி சம்பவத்துடன், தொடர்புடைய அரசியல் கட்சியொன்றினைச் சேர்ந்த பிரதான சந்தேக நபரைத் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்த நிலையில், தற்போது குறித்த விடயம் தொடர்பான விசாரணை சி.ஐ.டியினருக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X