2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

11 வயது சிறுவனை பலியெடுத்த டெங்கு

Freelancer   / 2022 மே 22 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, பாண்டியன்தாழ்வு பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.

இதில் பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் (வயது -11) என்ற யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே உயிரிழந்தார். 

கடந்த 18 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், 19 ஆம் திகதி வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஏற்பட்டு யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . 

அங்கு குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .