2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது

Kogilavani   / 2014 ஜூன் 24 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் நெடுந்தீவுக்கு அண்மைய பகுதிகளில் வைத்து செவ்வாய்;க்கிழமை (24) அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

அவர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டதாகப் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.

மேற்படி மீனவர்களை கடற்படையினர் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், குறித்த மீனவர்களை பொலிஸாரிடமிருந்து பொறுப்பேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நீரியல் வளத்துறையினர் மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .