2025 மே 20, செவ்வாய்க்கிழமை

175 மனித எலும்புக்கூடுகள் இதுவரை மீட்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் 'சதொச” விற்பனை நிலைய வளாகத்திலிருந்து இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

'சதொச” விற்பனை நிலைய வளாகத்தில் இன்று (10) 84 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை குறித்த வளாகத்தில் 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 169 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஏனைய அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணிகள் இடம்பெறுகின்றது.

மேலும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவை காபன் பரிசோதனைக்கு உட்படுத்துவதுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X