A.P.Mathan / 2011 மார்ச் 15 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
சாவகச்சேரி - வரணி இயற்றாலை பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பூசகர் ஒருவரின் சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்டுள்ளனர்.
சாவகச்சேரியைச் சேந்த இளம் பூசகரான குணாநந்த சர்மா கரிகரசர்மா (வயது 24) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக உறவினர்களால் சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025