2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மர்மப்பொருள் வெடித்ததில் இளம் குடும்பப் பெண் படுகாயம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 20 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். வடமராட்சி தாழையடிப் பகுதியில் மர்மப் பொருளொன்று வெடித்ததில் இளம் குடும்பப் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பெண், யாழ். வடமராட்சி தாழையடிப் பகுதியில் அண்மையில் மீள்குடியேறிய நிலையில் காணிகளை துப்புரவாக்கும் பணியில் ஈடுபட்டபோதே, மர்மப் பொருள் வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார்.

வடமராட்சி தாழையடியை சேர்ந்தவரான கௌசீகராஜன் கனகேஸ்வரி (வயது 35) என்ற பெண்ணே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X