Super User / 2011 மார்ச் 21 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பருத்தித்துறை வீதியில் கூலர் வாகனமொன்றும் மோட்டார் சைக்கிள்ளும் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் நீர்வேலி தெற்கைச் சேர்ந்த 29 வயதான இராசலிங்கம் தவசீலன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
தலையிலும் கழுத்திலும் படுகாயமடைந்த இவர் உடனடியாக கோப்பாய் அரசினர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025