2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தூக்கில் தொங்கியவாறு வயோதிப மாதுவின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 22 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நவாலியிலுள்ள பாலடைந்த வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கியவாறு வயோதிப மாதுரொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மானிப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பாலடைந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக  அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்தே இச்சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவாலி கிழக்கைச் சேர்ந்த மு.கணபதியம்மா (வயது 68) என்பவரின் சடலமே இவ்வாறு தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளது.

இவரது பிள்ளைகள் வெளிநாடுகளில் வசித்து வருகின்ற நிலையில்,  இவர் தனிமையில் வசித்து வந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.

மேற்படி சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது  யாழ். போதனா  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X