2025 ஜூலை 02, புதன்கிழமை

யாழ். தீவகப் பகுதிகளில் வெளிச்சவீடுகள் அமைப்பு

Kogilavani   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ். அனலைதீவு,   நயினாதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் உள்ள கடற்கரையேரங்களில் புதிதாக வெளிச்ச வீடுகளை நிறுவுவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த பகுதிகளில் கடற் தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் நன்மை கருதி இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தீவகத்திற்கு பொறுப்பான கடற்படை உயர் அதிகாரி மார்சல் கெந்த டொற்ரி வசந்த தெரிவித்துள்ளார்.

கடற் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு இந்த வெளிச்சவீடுகள் திசைகாட்டிகளாக இருக்கும் என்றும் அவர்கள் குறித்த இடத்திற்கு விரைவாக தமது கடற்பயணத்தை மேற் கொள்வதற்கு இலகுவாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .