Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
நல்லூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்திப் பிரிவினரின் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தயாபரி கிரிதரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம், சிறப்பு விருந்தினராக சமூகசேவைகள் உத்தியோகத்தர் திருமதி பா.வைதேகி;, கௌரவ விருந்தினராக நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில் நந்தனன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிகழ்வுகளாக பட்டிமன்றம், கவியரங்கு, நடனங்கள் மற்றும் பரிசளிப்பு என்பன நடைபெறவுள்ளன.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025