2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வினைத்திறனாக செயலாற்றிய கிராம அலுவலகர் மூவர் கௌரவிக்கப்படவுள்ளனர்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் வினைத்திறனாக செயலாற்றிய கிராம அலுவலகர் மூவருக்கு சிறந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அறிவித்துள்ளார்.

இதில் உடுவில் பிரதேச செயலக கிராம அலுவலகர் இ.எயூஜின் மஸனட், கரவெட்டி பிரதேச செயலக கிராம அலுவலகர் பா.நளிட், தெல்லிப்பளை பிரதேச செயலக கிராம அலுவலகர் கெ.பூபாலசிங்கம் ஆகியோருக்கே விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.

இவர்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் எதிர்வரும் 26ஆம் திகதி வழங்கி வைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .