Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மட்டுவில் வடக்குப் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விதித்து சாவகச்சேரி நீதிவான் மா.கணேசராசா தீர்ப்பளித்தார்.
அத்துடன், 1,500 ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறும் அவ்வாறு செலுத்தத் தவறின் ஒரு மாதகால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுமெனவும் சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டார்.
யாழ். சாவகச்சேரி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை காலை எடுத்துகொள்ளப்பட்டபோதே, நீதிவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்.
மேற்படி நபர், கடந்த 2008ஆம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டாம் திகதி யாழ். மட்டுவில் வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக 27 வயதுடைய யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago