2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கடற்படையினரால் காப்பற்றப்பட்ட வடமராட்சி மீனவர்கள்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். வல்வெட்டித்துறை வடக்கு, ஆதிகோவிலடியைச் சேர்ந்த இரு மீனவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு பின்பு யாழ். எழுவைதீவு கடற்பரப்பில் இருந்து கடற்படையினரால் காப்பற்றகப்பட்டுள்ளதாக வடமராட்சி கடற்தொழில் அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.ஏமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இயற்கை சீற்றம் காரணமாக இவர்களது படகுதிசை தெரியாமல் தடுமாறியதாகவும் இவர்களை இலங்கைக் கடற்படையினர் காப்பற்றி மருத்துவ உதவிகளையும் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட மீனவர்கள் நேற்று மாலை யாழ். ஊர்பாவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை மாலை தொழிலுக்குச் சென்ற இவர்கள் நேற்றுமுன்தினம் அதிகாலை கரைதிரும்ப வேண்டிய நிலையில் நேற்றுமுன்தினம் பகல்வரை இவர்கள் கரை திரும்பவில்லை.

கடற்படையினரின் உதவியுடன் இக்கடற்றொழிலாளர்கள் நேற்றையதினம் புதன்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கடற்தொழில் அபிவிருத்திச் சங்கத்தலைவர் எஸ்.ஏமிலியாம் பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X