2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கடல் நீரேரியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கோப்பாய் வண்ணாத்திப்பாலத்திலுள்ள கடல் நீரேரியில்  மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டுவில் வடக்கைச் சேர்ந்த வட்டுப்பிள்ளை வடிவேல் (வயது 74) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மீனவர் வழமையாக கடல் நீரேரியில் தூண்டிலில் மீன்பிடிப்பவரென உறவினர்கள் தெரிவித்தனர். மேற்படி மீனவரைக் காணாத நிலையில் உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டனர்.

பொலிஸாரின் உதவியுடன் மீனவரது சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X