2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கடற்றொழிலாளர்களுக்கான கடன் வழங்கும் திட்டம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கடற்றொழிலாளர்களுக்கான  கடன் வழங்கும் திட்டத்தை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் இலங்கை வங்கியுடன் இணைந்து எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் யாழ்.  மாவட்ட உதவிப் பணிப்பாளர் இ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

படகு, இயந்திரம், வலைகள் மற்றும் கடற்றொழில்சார் உபகரணங்களை கடற்றொழிலாளர்கள்  கொள்வனவு செய்வதற்கான கடன் வழங்கப்படவுள்ளது. ஒருவர் ஆகக்கூடிய தொகையாக 10 மில்லியன் ரூபாவைக் கடனாக பெற்றுக்கொள்ளலாம்.

20 இலட்சம் ரூபாவுக்கு உட்பட்ட கடன்களுக்கு 5.5 வீத வட்டியைக் கடன் பெறுபவர் செலுத்த வேண்டும். 4 வீத வட்டியை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் செலுத்தும். 20 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட கடன்களுக்கு 8 வீத வட்டியைக் கடன் பெறுபவர் செலுத்த வேண்டும். 4 வீத வட்டியை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் செலுத்துமெனவும் அவர் கூறினார்.  

கடன் பெறவிரும்பும் கடற்றொழிலாளர்கள் யாழ். பண்ணையிலுள்ள கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தில் பதிவுகளை மேற்கொண்டு கடன் விண்ணப்பபடிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் இ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X