2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஊழல் நிறைந்த யாழ். மாநகரசபையை கலைத்து புதிய மாநகரசபை உருவாக்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கஸ்தூரியார் வீதியில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தொகுதியில் பலகோடி ரூபாய் ஆளும் கட்சியினரால் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ். மாநகரசபை  மேயர் சம்பந்தப்பட்டுள்ளார். இதனால் ஊழல் மோசடி இல்லாத யாழ். மாநகரசபையை உருவாக்குவதற்கு  யாழ். மாநகரசபை கலைக்கப்பட வேண்டுமென எதிரணியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ். மாநகரசபையில் எதிரணியினராகிய எங்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களையும்  பேச்சுரிமைகளையும்  நாங்கள் கொண்டு வரும் பிரேரணைகளையும் ஆளும் தரப்பினர் செவிமடுப்பதுமில்லை. அதை சீர்தூக்கி பார்ப்பதுமில்லை.

ஊழல் நிறைந்த யாழ். மாநகரசபையின் ஆளும் தரப்பினரை நேரடி விவாதத்திற்கு வருமாறு எதிர்க்கட்சியினர் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

ஊழலும் மோசடியும் இடம்பெற்று வரும் மாநகரசபையை கலைத்து புதியதொரு மாநகரசபையை நிர்வகிக்க யாழ். மக்கள் தங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X