2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Kogilavani   / 2011 ஏப்ரல் 29 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற இணையத்தள செய்தியாளர் ஒருவர் பல்கலைக்கழக மாணவர்களினால் தாக்கப்பட்டதுடன்  பாதுகாவலளர்களினாலும்  அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய சம்பவம் இன்று இடம் பெற்றது.

உதயன் இணையத்தளத்தின் ஊடகவியலாளரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். இதேவேளை மாணவத் தலைவர் இடை நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சாரர் வகுப்புகளை பகிஷ்தரித்த வேளையில் மற்றும் ஒரு சாரர் இந்த இடை நிறுத்தத்தை சரியெனக் கூற இரு சாராருக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலைமையை படமெடுத்த வேளையில் இந்த  ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X