2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் உலக வங்கியின் நிதியுதவியில் நிரந்த வீடுகள்

Suganthini Ratnam   / 2011 மே 03 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

உலக வங்கியின் நிதியுதவியுடன் 6,258 நிரந்தர வீடுகள் யாழ். குடாநாட்டில் அமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்காகவும் யுத்தத்தின்போது வீடுகளை இழந்த மக்களுக்காகவும் இந்த வீட்டுத் திட்டம் அமைக்கப்படவுள்ளது.

இந்தியாவின் வீட்டுத்திட்டத்தின் கீழ் 5,250 வீடுகளையும்  அரசசார்பற்ற நிறுவனங்களான நெப் 2,377 வீடுகளையும் கரித்தாஸ் கியூடெக் 247 வீடுகளையும் போரூட் 9 வீடுகளையும் முஸ்லிம் பௌன்டேஷன் 10 வீடுகளையும் அமைக்கப்படவுள்ளன.

இதேவேளை, இந்தியாவின் வீட்டுத்திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்ட பிரதேசங்களில் இதற்கான கட்டட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X